Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிலும் ஜே.ஈ.ஈ தேர்வுகள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:33 IST)
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இணைந்து படிப்பதற்கு ஜே.ஈ.ஈ நுழைவுத்தேர்வு அவசியம் என்பது தெரிந்ததே 
 
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. ஜே.ஈ.ஈ தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தனர்
 
இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் இனிமேல் பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments