Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத்தில் தெரிந்த பிசாசு உருவம்; அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:30 IST)
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிசாசு நடமாட்டம் இருப்பதாக வெளியாகி வரும் புகைப்படம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிகளை செய்து வந்துள்ளனர். பொதுவாக வேலை தொடங்கும் போதும், முடியும் போதும் பணி செய்த பகுதியை புகைப்படம் எடுத்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கம். பணிகளை முடித்து வழக்கம்போல புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் வேலை பார்த்த இடத்தில் சுடுகாட்டு கரை அருகே கருப்பாக ஒரு உருவம் தெரிந்துள்ளது. இதை மற்றவர்களிடமும் காட்ட அது பிசாசுதான் என இந்த விஷயம் கிராமம் முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கிராம மக்கள் அந்த குறிப்பிட்ட சுடுகாட்டு பாதையில் செல்ல அச்சப்படுகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments