Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராயன் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (20:02 IST)
சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ சற்றுமுன் வெளியிட்டது. இந்த புகைப்படம் வெளியான ஒருசில நிமிடங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
 
இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல் என போற்றப்படும் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
 
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிமீ தூரத்தில் சந்திரயான் 2 இந்த புகைப்படத்தை எடுத்திருப்பதாகவும், இந்த புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments