Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு பெண்ணுடன் தொடர்பு : கணவரை குத்திக் கொன்ற மனைவி !

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (19:56 IST)
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சுனில் கடம் ( 36). இவரது மனைவி பிரனாளி (33). இந்த தம்பதியர்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.  இந்நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மும்பை அந்தேரியில் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்த போது ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் கடம், அலுவகத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த பிரனாளி கணவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த பிரச்சனை தினமும் வீட்டில் நடந்துவந்ததால், ஒருகட்டத்தில் கணவரை கொன்றுவிட பிரனாளி திட்டம் தீட்டினார். அதன்படி  சுனில் கடம் இரவு படுக்கச் சென்றது. சமையல் அறைக்குச் சென்ற பிரனாளி, அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து, சுனில் தூங்கியதும், அவரது வயிறு, கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். 
 
அதன் பின்னர், அவரது பெற்றோரிடம் சென்று, சுனில் தன்னைத் தானே கத்தியில் குத்திக்கொண்டார் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீஸிக்கு தகவல் அளித்தனர். பின்னர் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதில் 11 இடங்களில் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் பிரனாளியிடம் விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருவதாகத தகவல்கள் வெளியாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments