Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலே இஸ்ரோ..வெற்றிகரமாக நிலவு வட்டப்பாதைக்குள் சென்றது சந்திரயான் 2

பலே இஸ்ரோ..வெற்றிகரமாக நிலவு வட்டப்பாதைக்குள் சென்றது சந்திரயான் 2
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:17 IST)
சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டபாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில் ராக்கெட் ,விண்கலத்தை  புவி வட்டபாதையில் கொண்டு நிறுத்தியது. பின்பு சுற்றுவட்டபாதை படிபடியாக அதிகரிக்கப்பட்டு, நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2-வை சேர்க்க திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் படி, சந்திரயானின் திரவ இன்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயக்கப்பட்டது. இதனால் நிலவின் வட்டபாதையில் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.

விண்ணில் பாய்ந்த 28 நாட்களுக்கு பிறகு சந்திரயான் 2 விண்கலம், தற்போது நீள்வட்டபாதையில் நிலவை சுற்றி வருகிறது. இந்த செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி, விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டார் பிரிக்கப்பட்டு, செப்டம்பர் 7 அன்று நிலவில் மெதுவாக இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக் டாக்கில் வீடியோ – மனைவியைக் கொலை செய்த கணவன் !