Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்ஜாமீன் கிடைக்காததன் எதிரொலி: ப.சிதம்பரம் ஆஜராகிறாரா?

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:10 IST)
ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவில் இருந்து தீவிர முயற்சியில் உள்ளனர். இருப்பினும் ப.சிதம்பரம் எங்கு இருக்கின்றார் என்பது தெரியவில்லை
 
இந்த நிலையில் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் அவர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவை நீதிபதி தலைமை நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்தார். ஆனால் தலைமை நீதிபதி இன்று அயோத்தி வழக்கை விசாரணை செய்ததில் பிசியாக இருந்ததால் அவரால் இந்த மனுவை விசாரணை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த மனு வரும் 23ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால் இடைப்பட்ட இரண்டு நாட்களில் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
 
இந்த நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக திட்டமிட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் அவர் ஆஜராக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ப.சிதம்பரம் ஆஜராகும் பட்சத்தில் அவரை விசாரணை செய்யும் அதிகாரிகள், விசாரணைக்கு பின் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments