Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு ஆயுதம் எதுவும் வாங்க வேண்டாம்! – முப்படைகளுக்கு கடிதம்!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:50 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதம் வாங்குவதை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்திய ராணுவத்தின் ஆயுத தேவைகளுக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் முந்தைய காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளது இந்தியா. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் மருத்துவ பணிகளுக்கு நிதி ஏராளமாக தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி பற்றாக்குறை ஏற்படுவதால் அரசு பல்வேறு வகைகளில் நிதியை சேகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆயுதங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முப்படைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. ராணுவ நிதியையும் கொரோனா பாதிப்புகளுக்கு செலவளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments