Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை முழுவதும் இறந்து கிடந்த காக்கைகள்! – பீதியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:33 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சீர்காழியில் காகங்கள், நாய்கள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் கொரோனா அச்சத்தால் வீடுகளை விட்டு வெளியேறாமல் அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காக்கைகளும், நாய்களும் சாலைகளில் ஆங்காங்கே இறந்து கிடப்பதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த சுகாதார மற்றும் கால்நடை அதிகாரிகள் சுமார் 40 காக்கைகளையும், 3 நாய்களையும் இறந்த நிலையில் பறிமுதல் செய்துள்ளனர். அவை இறந்ததன் காரணம் குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் இப்படி காக்கைகளும், நாய்களும் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments