இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

Siva
புதன், 13 ஆகஸ்ட் 2025 (12:28 IST)
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU), பகவத் கீதையின் தத்துவங்கள் மற்றும் போதனைகளை மையமாக கொண்டு, புதிய முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பு, சமகால சவால்களை எதிர்கொள்ள பகவத் கீதை எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை ஆய்வு செய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
பகவத் கீதையின் தத்துவங்களை, இன்றைய சமூகச் சூழலுக்கு பொருத்தி பார்க்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "பகவத் கீதை தீவிரவாதம், போர், சுற்றுச்சூழல், மனித மதிப்புகள், சமூகவியல் மற்றும் இந்திய சிந்தனை மரபின் அறிவியல் அணுகுமுறை குறித்த ஆழமான தகவல்களை வழங்குகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தப் படிப்பின் மூலம், மாணவர்கள் பகவத் கீதையின் தத்துவங்களை புரிந்துகொள்வதுடன், நவீன உலகின் சிக்கல்களுக்கு அதன் மூலம் தீர்வு காணும் திறனை பெறுவார்கள் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த படிப்பு, இந்தியத் தத்துவ மரபு மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து விரிவான அறிவை வழங்கும். ஆனால் இந்த படிப்புக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments