Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (07:42 IST)
அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்த கோட்சே குறித்து கமல் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் ஒருசிலர், கோட்சேவை தியாகி என்றும் போற்றி பின்னர் கண்டனங்களை பெற்று வந்தனர். குறிப்பாக பாஜக பெண் சாமியார் பிரக்யாசிங், கோட்சே குறித்து கூறிய ஒரு கருத்து மன்னிக்க முடியாத தவறு என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இருப்பினும் கோட்சேவை இன்னும் ஒருசிலர் போற்றி புகழ்ந்து வருகின்றனர்
 
இந்த நிலையில் குஜராத் மாநில கோயில் ஒன்றில் கோட்சேவின் பிறந்ததினத்தை கொண்டாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து மகாசபா என்ற அமைப்பின் சார்பில் குஜராத் மாநிலத்தின் லிம்பயாத் என்ற இடத்தில் உள்ள சூரியமுகி ஹனுமான் கோயிலில் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது. நாதுராம் கோட்சே பிறந்த நாளான கடந்த ஞாயிறு அன்று இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒருசிலர் கோட்சேவின் படத்தை வைத்து பூஜை செய்து கொண்டாடியதாக தெரிகிறது.
 
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து சுதாரித்த குஜராத் போலீசார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments