Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (08:20 IST)
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூபாய் 25 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமையல் எரிவாயு சிலிண்டர்களை இதுவரை ரூ.825.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூபாய் 25 உயர்த்தப்பட்டு ரூ.850.50ஆக என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் வணிகரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலையும் ரூபாய் 84.50 உயர்த்தப்பட்டுள்ளது என்ப்தும், இதனால் வணிக ரீதியான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.1,687.5 0 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விலையேற்றம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு பலமுறை சிலிண்டர் எரிவாயு விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments