Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடிகட்டி பறக்கும் போதை பொருள் கடத்தல்..! 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்..!!

Senthil Velan
திங்கள், 29 ஏப்ரல் 2024 (16:36 IST)
குஜராத் கடற்பகுதியில் மீண்டும் 173 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத்தில் அரபிக் கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோருடன் இணைந்து அரபிக் கடலில் இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில், 173 கிலோ போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள், போதைப் பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ: நடிகர் சங்க கட்டிடம்.! ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நெப்போலியன்..!
 
முன்னதாக நேற்று  அரபிக் கடலில் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், படகில் பயணித்த பாகிஸ்தானை சேர்ந்த 14 பேரை கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments