Publish Date: Mon, 29 Apr 2024 (11:16 IST)
Updated Date: Mon, 29 Apr 2024 (11:31 IST)
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்களும், ஷாரூக்கான் 30 பந்துகளில் 58 ரன்களும் அடித்தனர்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜாக்ஸ், அடுத்த பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 41 பந்துகளில் சதமடித்தார்.
இதன் மூலம் தனது இன்னிங்ஸின் இரண்டாவது அரைசதத்தை அவர் வெறும் பத்தே பந்துகளில் எட்டி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டில் 13 பந்துகளில், விராட் கோலி 2016 ஆம் ஆண்டில் 14 பந்துகளிலும் அதிகவேகமாக அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.