Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் வழக்கு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (23:27 IST)
ஹரியானா மாநிலத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு எதிராகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை இயற்றியது. இதற்கு எதிராக தமிழகம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும்  விவசாயிகள், அந்த மாநில துணை சபாநாயகரின் காரை அடித்து நொறுக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments