Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரலை கடித்து துப்பிய காப்பீட்டு நிறுவன ஊழியர்! – டெல்லியில் பரபரப்பு

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:39 IST)
டெல்லியில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் இருவரிடையே நடந்த தகராறில் விரலை கடித்து துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மயூர் விஹாரியில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் மோஹித். இவர் ஒரு பணி நிமித்தமாக தனது சக ஊழியர் சித்தார் என்பவரோடு வெளியூருக்கு காரில் சென்றுள்ளார்.

பணி முடிந்து திரும்பி வரும்போது மோஹித் – சித்தார்த் இடையே பணி தொடர்பாக வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் காருக்குள்ளேயே இருவரும் சண்டையிட தொடங்க, ஆத்திரமடைந்த சித்தார்த் சக ஊழியரான மோஹித்தின் விரலை கடித்து துண்டாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மோஹித் அலறியடித்துக் கொண்டு காரை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதுகுறித்து மோஹித் அளித்த புகாரின் பேரில் சித்தார்த் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு காரில் கிடந்த அவரது விரலை மீண்டும் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments