Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பத்தி கவலை இல்ல; மோடி ஜீ மயில்களோடு பிஸியா இருக்கார்! – கலாய்த்த ராகுல் காந்தி!

கொரோனா பத்தி கவலை இல்ல; மோடி ஜீ மயில்களோடு பிஸியா இருக்கார்! – கலாய்த்த ராகுல் காந்தி!
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மத்திய அரசு கொரொனாவை கண்டுகொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒருநாள் பாதிப்புகள் 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் இந்த வார இறுதிக்குள் கொரோனா பாதிப்புகள் 50 லட்சத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி ”இந்த வாரத்தில் கொரோனா மொத்த பாதிப்புகள் 50 லட்சத்தை எட்ட உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தனிநபர் ஈகோவால் மேற்கொண்ட நடவடிக்கைகள் மொத்த நாட்டையும் பாதித்திருக்கிறது. உங்களை நீங்கள்தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சப்புனு முடிந்த முதல் நாள்: தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு!