Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிபா வைரஸ் - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Webdunia
திங்கள், 28 மே 2018 (12:33 IST)
கேளாவில் நிபா வைரசால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
முதலில் வவ்வால்கள் மூலம் இந்நோய் பரப்பப்படுகிறது என தகவல் வெளியானது. ஆனால் வவ்வால்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ததில் நிபா வைரஸ் பரவலுக்கு காரணம் வவ்வால்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments