Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமியத்தால் புற்று நோயை குணப்படுத்த சுகாதாரத்துறை ஆராய்ச்சி

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:07 IST)
புற்று நோயை குணப்படுத்த கோமியத்தில் ஆராய்ச்சி நடைபெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பசு மாட்டின் கோமியம் நோய் கிருமிகளை கொல்வதில் முக்கிய பங்கு வகிப்பதாக பல இந்துக்கள் நம்புகின்றனர். மேலும் பாஜக அரசு கோமியம் குறித்த ஆராய்ச்சியில் மூழ்கி வருகிறது.

இந்நிலையில் கோமியத்தால் புற்று நோயை குணமாக்க சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், புற்றுநோய் போன்ற குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் இந்த சிகிச்சை முறையை விரிவுபடுத்த ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங், தான் மார்பக புற்று நோயை கோமியத்தை குடித்து குணப்படுத்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments