கொரோனா 3வது அலை தாக்க 8 மாதம் டைம்: வெளியான கணிப்பு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:50 IST)
கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனால் கொரோனா இரண்டாம் அலை விரைவில் முடிவுக்கு வரும் நம்பப்படுகிறது. முன்னதாக கொரோனா 2வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் எனவும் இதன் பின்னர் அக்டோபர் மாதம் 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கொரோனா 3 ஆம் அலை உருவாக வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா 3 வது அலையால் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கொரோனா 3வது அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments