Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்.3 வரை நீட்டிப்பு.!!

Senthil Velan
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (17:44 IST)
மதுபான கொள்கை ஊழல்  வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்குக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஜூன் 21-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். 

பின்னர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் ஜூலை 11-ம் தேதி உச்ச நீதின்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.


ALSO READ: மலையாளத்தை போல் பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லை.! பிரபல நடிகை புகார்.!!
 
இந்நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி வாயிலாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்