Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கொல்ல சதி.! பாஜக மீது கொலை முயற்சி வழக்கு?.!!

Senthil Velan
ஞாயிறு, 21 ஜூலை 2024 (14:37 IST)
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொலை செய்ய பாஜக சதி செய்வதாக  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட  அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், கெஜ்ரிவாலின் வாழ்க்கையில் பாஜகவினர் மற்றும் டில்லி ஆளுநர் சக்சேனா விளையாடுவதாக தெரிவித்தார்.
 
சிறையில் வைத்து கெஜ்ரிவாலை  கொல்ல சதி நடப்பதாகவும், கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து டில்லி ஆளுநர் மற்றும் மத்திய பாஜக  தவறான அறிக்கைகளை வெளியிடுவது எங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால் பதில் சொல்ல வேண்டும் என்றும் இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: 200 நாட்களில் 595 கொலைகள்.! ஊழல் இல்லாத துறையே இல்லை..! திமுக அரசை விளாசிய..!!

விரைவில் டில்லி ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments