Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு; சிறை நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டு..!

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு; சிறை நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டு..!

Mahendran

, திங்கள், 15 ஜூலை 2024 (15:57 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சில மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் உள்ளது.

இந்த நிலையில் அரவிந்த எதிர்பால் உடல்நிலை மோசமான நிலையை எட்டி இருப்பதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெஜ்ரிவால் அவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பதாகவும் சர்க்கரை அளவு மோசமாக குறைந்திருக்கும் நிலையில் சிறை நிர்வாகம் அவருக்கு சரியான மருந்துகளை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக கெஜ்ரிவால் சர்க்கரை அளவு பலமுறை ஐம்பதுக்கு கீழ் சென்றதாகவும் சிறையில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அவருக்கு பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவி இல்லாததால் என்ன செய்வது என்றே தெரியாமல் திமுக உள்ளது: அண்ணாமலை ஆவேசம்..!