Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்தால் பாஜக ஆட்சி கவிழ்கிறதா? திடுக்கிடும் தகவல்

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:00 IST)
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் மாணவர்களும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பகுதிகளில் பதட்டமான சூழ்நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் குடியிருப்பு சட்டத்துக்கு எதிராக அசாமில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை நடத்தி வருவதால் அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போலிஸ் மற்றும் இராணுவத்தினர் கலவரத்தை அடக்க தீவிர முயற்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் அசாமில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு அசாம் கண பரிஷத் ஆதரவு அளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு அசாம் கண பரீஷித்தின் எம்பிக்கள் ஆதரவாக ஓட்டுப் போட்ட நிலையில் தற்போது கட்சிக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து அசாம் கண பரிஷத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரபல்ல குமார் மகந்தா அவர்கள் இதுகுறித்து கூறிய போது ’குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தங்கள் கட்சி வாக்களித்தது தவறு தான் என்றும் தேவைப்பட்டால் தற்போது அசாமில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அசாமில் நடைபெற்று வரும் பாஜக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments