Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கவசம் உயிர்கவசம், கார்களில் கட்டாயம் சீட்பெல்ட் என்பதனை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங்க் பேரணி

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (21:38 IST)
கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க கோரியும், தலைக்கவசம் உயிர்கவசம், கார்களில் கட்டாயம் சீட்பெல்ட் என்பதனை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விழிப்புணர்விற்காக ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கரூர் அடுத்த திருக்காம்புலியூர் பகுதியின் ரவுண்டானா அருகே துவங்கிய இந்த ஸ்கேட்டிங்க் விழிப்புணர்வு பேரணி கரூர் நகர போக்குவரத்து காவல் துறை சார்பிலும், அக்னி ஸ்கேட்டிங்க் அகாடமி மற்றும் கரூரில் உள்ள ஈகிள் தொலைக்காட்சியும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது.

முன்னதாக அனைவரிடத்திலும் கரூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் மாரிமுத்து அனைவரிடமும் விழிப்புணர்வு பிரசூரங்களை கொடுத்ததோடு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் மக்களிடையே பிரசூரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதிக பாரம் ஆபத்தில் முடியும், சாலைவிதிகளை மதிப்போம் மரணத்தினை தவிர்ப்போம், மிதவேகம் மிகநன்று, போதையில் பயணம் பாதையில் மரணம், தலைக்கவசம் உயிர்கவசம், காரில் பயணம் சீட் பெல்ட் முக்கியம் என்கின்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங் பேரணி தயாரானது. இந்த பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இந்த ஸ்கேட்டிங் பேரணி கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவை சாலை வந்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே வந்தடைந்தது. இது போன்ற இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி கரூரில் முதன்முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments