Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:40 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கும், தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் எழுந்து வருகிறது. இந்நிலையில் பழைய ஊழல் வழக்குகளில் திடீரென சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டமிட்ட சதி என தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவை காண நடிகர் பவன் கல்யாண் நேற்று இரவு சென்றபோது போலீஸார் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் நடிகர் பவன் கல்யாண் நடுரோட்டில் தர்ணா செய்து வருகிறார். இந்த சம்பவங்கள் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அதன்படி, விஜயவாடாவில், போலீஸார் சமர்பித்த ரிமாண்ட் ரிப்போர்ட் மீது தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments