Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அம்மா உணவகம்’ போல் ‘அண்ணா உணவகம்’.. சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்ட 5 கோப்புகள்..!

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (07:39 IST)
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்த நிலையில் சமீபத்தில் முதல்வராக அவர் பதவியேற்று கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் முதல்வராக அவர் பதவி ஏற்றவுடன் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. முதலாவதாக ஆந்திரா அரசில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, இரண்டாவது ஆக நில உரிமை சட்டத்தை ரத்து செய்வது ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனை அடுத்து முதியோருக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை 4000 ஆக உயர்த்துவது, திறன் கணக்கெடுப்பை நடத்துவது ஆகிய கோப்பிலும் அவர் கையெழுத்து விட்டார்.

இதனை அடுத்து ஐந்தாவது அவர் ஆந்திரா முழுவதும் அண்ணா உணவகங்களை திறப்பது தொடர்பான கோப்பிலும் கையெழுத்திட்டு உள்ளார். தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அம்மா உணவகம் திறக்கப்பட்டது போல், 2016 ஆம் ஆண்டு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அண்ணா உணவகங்களை திறந்தார். அங்கு  5 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்பட்ட நிலையில் ஜெகன் மோகன் ஆட்சியில் அவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அண்ணா உணவகங்களை ஆந்திரா முழுவதும் திறக்கும் கோப்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments