Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (14:48 IST)
கொரோனா பரவலால் தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில் வருமன வரி, ஜிஎஸ்டி வரிக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மாத இறுதியில் ஆண்டு வருமான வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டியது குறித்து வர்த்தகர்கள், வியாபாரிகள் கால நீட்டிப்பு கோரினர்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பு நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி 2019-2020 ம் ஆண்டிற்கான வருமான வரி இந்த மாத இறுதியில் செலுத்தப்பட வேண்டிய நிலையில் கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்ட் – ஆதார் கார்டு இணைப்புக்கான கடைசி தேதியாக மார்ச் 31 அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியை பொறுத்தவரை மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 5 கோடிக்கு குறைவான வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு தாமத கட்டணம், வட்டி விகிதம் உள்ளிட்ட எதுவும் விதிக்கப்படாது. 5 கோடிக்கு மேல் வருவாய் பெறும் பெரு நிறுவனங்களுக்கு வட்டி வீதம் 12% த்திலிருந்து 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments