Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரவு முதல் உள்நாட்டு சேவைகளும் ரத்து! தமிழகம் முழு முடக்கம்!

இரவு முதல் உள்நாட்டு சேவைகளும் ரத்து! தமிழகம் முழு முடக்கம்!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (09:38 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு தொடங்கியதையடுத்து கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சென்னை சர்வதேச நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. இதுவரை 350க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட உள்ளது.

உள்நாட்டில் மட்டுமே விமான போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விமானசேவை நிறுத்தம் அமலாகும். இதனால் இலக்கை அடையும் விமானங்கள் அங்கிருந்து மீண்டும் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#ThalaivaOnDiscovery: கொரோனா ரணகளத்துலயும் ஒரு குதுகளம்!!