Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச டேட்டா போய், இலவச பெட்ரோல்: அம்பானியின் அசத்தல் அறிவிப்பு!!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (14:37 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தேசத்தின் பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு உதவும் வகையில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
மேலும், மை ஜியோ அப்ளிகேசனில் உள்ள Corona Symptoms Checker ஆப்ஷனையும் வழங்கியுள்ளது. இதுதோடு நிறுத்தாமல் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார நிவாரணங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
 
கொரோனா நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 
 
இந்தியாவிலேயே அதிகம் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ள  மகாராஷ்டிராவிற்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments