Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை விலை உயர்வு; கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:45 IST)
இந்தியாவில் கோதுமை விலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் விலையை கட்டுப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் கோதுமை ஏற்றுமதி அதிகரித்தது. இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது.

ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தடை நீக்கப்பட்டது. இதனால் கோதுமை ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்தது. கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததால் உள்நாட்டில் கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக விலை கணிசமாக உயரத்தொடங்கியுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் கோதுமை உள்நாட்டு விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments