Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் தேரோட்டம்! – கடலென குவிந்த பக்தர்கள்!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:27 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி தேரோட்டம் இன்று நடைபெறுவதால் அதை காண ஏராளமானோர் கூடியுள்ளனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணியில் நடைபெறும் ஆவணி திருவிழா விசேசமானதாகும், 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக வருகை தருவர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி திருவிழா கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெருமளவு பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 17ம் தேதி முதல் நடந்து வரும் திருவிழாவில் இன்று சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற உள்ளது.

முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வரும். அதை தொடர்ந்து வள்ளியம்மாள் தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வர உள்ளது. இரவு பல்லக்கில் 8 வீதி உலா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments