Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானியின் சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (17:31 IST)
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா காம்பளக்ஸில் அம்பானி  இண்டர் நேசனல் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், அங்குள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் பள்ளியில் தொலைபேசி எண்ணிற்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இப்பள்ளிக்கு மோப்ப நாய்களுடன் சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக மும்பை போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments