Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அண்ணாமலை போட்டியா?

Annamalai
Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (17:23 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா என்பவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த தொகுதி மீண்டும் திமுக கூட்டணியின் காங்கிரஸுக்கு கிடைக்கும் நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவுக்கு கொடுக்கப்படும் என்றும் குறிப்பாக அண்ணாமலை இந்த தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. 
 
கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அதிமுக வலுவாக இருக்கும் நிலையில் அண்ணாமலை போட்டியிட்டால் நிச்சயம் அந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. தமிழக அரசியலில் இந்த இடைத்தேர்தல் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments