Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் பணிகள் தீவிரம்: இந்து - முஸ்லீம் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (09:02 IST)
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு இந்து - முஸ்லீம் அமைப்புகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அயோத்தி நில வழக்கில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள நகர் பகுதியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவும் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நேற்று இந்து - முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், முஸ்லீம் மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.
 
அந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும்போது அனைவரும் அமைதியை நிலைநாட்டுவோம், எந்தவித இடையூறுகளும் தரமாட்டோம் என அனைத்து அமைப்புகளும் உறுதியளித்தன. 

தொடர்புடைய செய்திகள்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments