Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதால் நோயாளி பலி.. அதிர்ச்சி சம்பவம்..

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (13:59 IST)
மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென வெடித்து சிதறியதால் அந்த ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியான சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை - புனே விரைவு சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் 74 வயதான நோயாளி இருந்ததாகவும் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்புலன்ஸில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த ஏழு பேர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக தான் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments