Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ரீசார்ஜ் ப்ளான் விலையை ஏற்றிய ஏர்டெல்! – புதிய ப்ளான் விவரங்கள் உள்ளே..!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (10:32 IST)
ஏர்டெல் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை அதிகரித்துள்ளது பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரவலாக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் இரு நிறுவன ரீசார்ஜ் ப்ளான்களும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே தொடர்ந்து வந்தன.

இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது. குறைந்த பட்ச ரீசார்ஜ் விலை 79 ஆக இருந்த நிலையில் தற்போது 99 ரூபாயாக உயர்ந்துள்ளது. அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான ரீசார்ஜ் முதலில் 219 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 265 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுபோல அனைத்து ப்ளான்கள் விலையும் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments