Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுக்கின்றாரா அதானி?

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:44 IST)
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
காரைக்கால் துறைமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாயிரம் கோடிக்கு மேல் கடன் இருந்ததாக கூறப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது
 
இந்த நிலையில் தற்போது காரைக்கால் துறைமுகம் ஏலம் விட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் அதானிக்கு போட்டியாக வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றுக்கொடுத்த காரைக்கால் துறைமுகத்தை அதானி கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏற்கனவே இந்தியாவின் பல துறைமுகங்கள் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் காரைக்கால் துறைமுகம் அவரது கட்டுப்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments