Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயில் பாம்பு கடித்ததில் இளைஞர் பலி.! விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்.!!

Senthil Velan
சனி, 7 செப்டம்பர் 2024 (17:08 IST)
தெலங்கானாவில் ரீல்ஸ்காக வாயில் பாம்பை வைத்து சாகசம் செய்த இளைஞர், அந்த பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம். இவர் ஒரு பாம்பு பிடி வீரர். இவரது மகன் சிவ ராஜூவுக்கும் பாம்பு பிடிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் சிவ ராஜூ 5 அடி நீளமுள்ள பாம்பின் தலையை தன் வாயில் வைத்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் பாம்பை வாயில் வைத்து கடித்து கொண்டே ஸ்டைலாக தலைமுடியை வாரி போஸ் கொடுத்துள்ளார். 
 
அப்போது வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது பாம்பு கடித்ததை உணராத இவர், விஷம் தலைக்கேற சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


ALSO READ: கட்சி ஆரம்பித்த நடிகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.! யாரை குறிப்பிட்டு சொல்கிறார் நாராயணசாமி.?
 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல்ஸ் முகத்தால்  பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments