Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐயா.. யாராவது காப்பாத்துங்க..! – கோவில் ஜன்னலில் சிக்கிய திருடனின் கதறல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (11:43 IST)
ஆந்திராவில் கோவிலில் கொள்ளையடிக்க சென்ற திருடன் ஜன்னலில் சிக்கிக் கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ளது எல்லையம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சமீபத்தில்தான் திருவிழா நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவிலுக்குள் கொள்ளையடிக்க திருடன் ஒருவன் புகுந்துள்ளான்.

ஜன்னல் கம்பிகளை நீக்கி உள்ளே புகுந்த திருடன் அம்மனின் தங்க நகைகள், உண்டியல் பணம் என எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியேற முயன்றுள்ளான். ஜன்னலில் பாதி உடலை நுழைத்த நிலையில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட திருடன் தொடர் முயற்சிகளால் சோர்ந்து அப்படியே தூங்கியுள்ளான்.

காலை கோவிலுக்கு வந்த மக்கள் ஜன்னலில் திருடன் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் காப்பாற்றுமாறு திருடன் கெஞ்சவே ஜன்னலிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜன்னலில் சிக்கிய திருடனை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments