Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜை செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அர்ச்சகர்(பதற வைக்கும் வீடியோ காட்சி)

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (12:45 IST)
ஆந்திரா சிவன் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு பூஜை செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலின் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமா ராவ். இவர் வழக்கம் போல் கோவிலை திறந்துவிட்டு, சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அங்கிருந்த இன்னொரு அர்ச்சகர் அவரை எழுப்பி நிற்கவைத்தார்.
 
ஆனால் சிறிது நேரத்திலே அவர் சிவன் சிலை மீது விழுந்தார். இதனால் பதறிப்போன அங்கிருந்த குருக்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
பூஜை செய்துகொண்டிருக்கும் போதே குருக்கள் இறந்த சம்பவம் அப்பகுதினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments