Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகெல்லா வைரசால் 2 வயது குழந்தை பலி - கேரளாவில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (11:33 IST)
நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா வைரசால் 2 வது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு பரவிய நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்தனர். கேரள அரசின் அதிரடி நடவடிக்கைகளால் நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் கேரளாவில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால், ஷிகெல்லா என்னும் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இச்சம்பவம் கேரள மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
 
ஷிகெல்லா வைரசை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments