Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 மாதமாக கோமாவில் இருந்த கர்ப்பிணி, குழந்தை பிறந்தவுடன் குணமான அதிசயம்

7 மாதமாக கோமாவில் இருந்த கர்ப்பிணி, குழந்தை பிறந்தவுடன் குணமான அதிசயம்
, வியாழன், 19 ஜூலை 2018 (20:57 IST)
கேரளாவை சேர்ந்த அனுப் என்பவரின் மனைவி பெத்தனா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த பெத்தனாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் கோமாவில் இருந்த பெண்ணிடம் மாற்றம் தெரிந்ததாகவும், குழந்தை பெத்தனாவிடம் தாய்ப்பால்  அருந்தியபோது அவர் கண்களை மூடிக்கொண்டே சிரித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
webdunia
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அனுப், தன்னுடைய மனைவி விரைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். ஏழு மாதங்களாக பெரிய பெரிய டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நிலையில் குழந்தை பிறந்த ஏழே நிமிடத்தில் அவரிடத்தில் தெரிந்த மாற்றம் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓயாத சாதி வெறி: தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கும் மேல்சாதியினர்!