Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 90 புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ்கள்: மத்திய அரசு தகவல்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (13:20 IST)
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் 90 வகை புது வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் இந்தியாவில் உருமாறிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 90 புதிய வகையை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இதன் காரணமாக சீனா சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒமைக்ரான் மற்றும் பிற புதிய வகை உருமாறிய வைரஸ்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் குறிப்பாக எக்ஸ்.பி.பி, பி.க்யூ ஆகிய வைரஸ்கள் நாட்டில் பரவலாக மேலோங்கி காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments