Publish Date: Sat, 11 Feb 2023 (10:10 IST)
Updated Date: Sat, 11 Feb 2023 (09:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து ஆடிய இந்திய அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று சதமடித்து அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்து செல்ல உதவினார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் ரோஹித் அடித்த முதல் சதம் இதுவாகும்.
மேலும் அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டி என மூன்று வடிவிலும் கேப்டனாக சதமடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் மூன்று வடிவிலும் கேப்டனாக செயல்பட்ட கோலி மற்றும் தோனி ஆகிய இருவர் கூட இந்த சாதனையைப் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.