Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 7 பேர் சுட்டுக்கொலை.! பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை..!!

Senthil Velan
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:22 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும்  மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து நாராயண்பூர் மற்றும் கண்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ALSO READ: இந்தியாவையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம்..! தேவகவுடாவின் பேரன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்..!!
 
அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments