Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள்: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (17:28 IST)
வந்தே பாரத் ரயில் செல்லும் பகுதிகளில் தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிவேக ரயிலான வந்தே வாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பது தெரிந்தது. 
 
குறிப்பாக சென்னை முதல் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்கள் அவ்வப்போது மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருவதை அடுத்து வந்தே பாரத் ரயில் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில் செல்லும் பாதைகள் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments