சோனியா பேச்சு தான் எங்கள் வேதம் - (சொ(கொ)ல்றாங்க...)
, செவ்வாய், 24 மார்ச் 2009 (13:48 IST)
சோனியா பேச்சு தான் எங்கள் வேதம்!
"
காங்கிரஸ் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதைப் பற்றி சோனியா காந்தி முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம். எங்களுக்கு அவர் சொல்வது தான் சட்டம்; வேதம். விஜயகாந்த் தேசியத் தோழர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்"-
செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு.***
"நாம் அனைவரும் இன்று அணி வகுத்து நிற்கிறோம்- நாடாளுமன்றத் தேர்தலுக்க்காக அல்ல. தேர்தல் இன்று வரும் நாளை போகும். ஆனால், பெரியாரிடம் கற்ற பகுத்தறிவு, அண்ணாவிடம் கற்ற மக்களாட்சி மாண்பு இந்த இரண்டையும் மக்களிடம் பரப்புவதற்காக நாம் நம்மை அர்பணித்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் இன்று அணி திரண்டிருக்கிறோம்."
- மு. கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் கருணாநிதி பேச்சு.