இந்திய பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாள் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் 458 புள்ளிகள் உயர்ந்து 77 ஆயிரத்து 666 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்கு சந்தை நெட்டு 159 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 523 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் இன்போசிஸ், சிப்லா, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, விப்ரோ, எச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், பஜாஜ் ஆட்டோ, அப்போலோ ஹாஸ்பிடல், ஐடிசி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால், புதிதாக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.