Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

Advertiesment
குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

vinoth

, திங்கள், 3 பிப்ரவரி 2025 (15:00 IST)
நேற்று நடந்த இங்க்லாந்து அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250. சமீபகாலமாக முதல் பந்து முதலே பவுண்டர்களை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா.

இந்நிலையில் தொடருக்குப் பின்னர் பேசியுள்ள கம்பீர் “இனிமேல் அணியில் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களுக்கு அதிக ஆதரவு தரப்போகிறோம். 140 முதல் 150 கிமீ வரை வீசப்படும் பந்துகளுக்கு எதிராக இப்படி ஒரு சதத்தை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை.” எனக் கூறியுள்ளார்.

அதேபோல அபிஷேக் ஷர்மாவின் தனிப்பயிற்சியாளரான யுவ்ராஜ் சிங் அபிஷேக் ஷர்மா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அவரது சமூகவலைதளப் பக்கத்தில் “நன்றாக விளையாடினாய் அபிஷேக்.  உன்னை இப்படியொரு இடத்தில்தான் நான் பார்க்க ஆசைப்பட்டேன். பெருமையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!