தங்கம் விலை வரலாறு காணாத உயர்ச்சி – ஒரு பவுன் 25 ஆயிரம் ?

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (17:07 IST)
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் ஒரு பவுன் 25000 ரூபாயைத் தொட இருக்கிறது.

தங்கம் விலைக் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.24,968க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,121-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்விற்குக் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றம் அதிகமாக இருக்கிறது.

சர்வதேச அளவில் டாலர் விலை குறைந்து, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. சராசரி அளவை விட சுமார் 30 சதவீதம் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments